தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதியக் காற்றழுத்த தாழ்வு மையம், அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப் பெறக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த சில நாட்களில், தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-11-09