தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், சக வீரர் பி.வி. சிந்துவுடன் சாய்னா நேவால் மோதினார். சுமார் 54 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சாய்னா நேவால் 21-17, 27-25 என்ற நேர் செட்டில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் சாய்னா நேவால் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றார்.
2017-11-09