புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும், இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *