இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பாக 7 வது கட்டமாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது, பெரும்பான்மை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு உள்ளவர்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த போது, சசிகலா – தினகரன் தரப்புக்கு 168 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரவித்ததாகவும் அவர் கூறினார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.