இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை 8 ஓவர்களாக குறைக்க முடிவெடுத்தனர். இதனையடுத்து, டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சவுத்தி பந்தில் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 8 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இறுதியில் நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என தொடரை கைப்பற்றியது.