வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு சென்றிருக்கும் ட்ரம்ப் அங்கு அதிபர் மூன் ஜே இன்னுடன் பல கட்டப்பேச்சு வார்த்தையை நடத்தினார். தென் கொரியத் தலைநகர் சியோலில் உள்ள ப்ளூ ஹவுசில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, வடகொரியா விரும்பினால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார். வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் பலம் என்ன என்பது வடகொரியாவுக்கு புரியும் என்றும் அப்போது அவர் கூறினார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனக் கூறி வந்த ட்ரம்ப் தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *