தொடர் கனமழையால் பாரிஸ் அருகே உள்ள செயின் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வழக்கத்துக்கு மாறாக 13 அடி உயரத்தில் ஓடுவதால் கரையோரப் பகுதிகளில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. செயின் ஆற்றில் 120 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் வரும் வாரங்களில் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
2018-01-30