புதுச்சேரியிலிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும், சட்டக்கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேரு வீதி, காமராஜர் சிலை முன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2018-01-30