தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு கல்விச் சுற்றுலா வந்த ஜெர்மன் மாணவ-மாணவிகள் 8 பேர், கடந்த 12 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் சென்று அரசு பள்ளியில் உள்ள கல்வி பயிலும் முறையை அறிந்து கொண்டனர். இதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர்கள் பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *