பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டுகிறது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார சீர்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவித்தார். எளிதான வர்த்தகம் செய்யும் நாடுகள் குறித்த உலகவங்கி பட்டியலில் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியா 142 ரேங்கிங் பெற்றிருந்தது என்று தெரிவித்த அருண் ஜெட்லி, கடந்தாண்டு 130- வது ரேங்கிங் பெற்றது என்றும் இந்தாண்டு 100 -வது ரேங்க் பெற்றுள்ளது என்றும் கூறினார்.