இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக முதலமைச்சர் வேட்பாளராக பிரேம் குமார் தூமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல், நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம் குமார் தூமல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரச்சார கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்தார்.
பிரேம் குமார் தூமல் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இமாச்சலில் தற்போது முதலமைச்சர் வீரபந்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் தூமல் அற்புதமான முதலமைச்சராக திகழ்வார் என பிரதமர் நரேந்திர மோடி ட்டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.