டெல்லியில், தொழில்துறை அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இதுவும் மோடியின் சாதனைகளில் ஒன்று என்றும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், அனைத்து பணமும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதன் மூலம், அனைத்து பணமும், கருப்பு பணம் இல்லை என்பதை மோடி மறந்துவிட்டார் என்றும், இதனால் அவரது அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றும், ராகுல்காந்தி தெரிவித்தார். தாஜ்மஹால் யாரால் கட்டப்பட்டது என்ற சிலரது விவாதம் காரணமாக, உலகமே நம்மை பார்த்து சிரிப்பதாகவும் ராகுல்காந்தி கூறினார்.
2017-10-27