திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருமலை சந்தக்கவுண்டன் புதூர் வனப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளச்சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வனத்துறையைச் சேர்ந்த 5 பேர் திருமலையைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வனப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் திருமலை இறந்து கிடந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், கிராம மக்களும் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது, திருமலையைத் தாக்கியதாக கூறப்படும் வனத்துறையைச் சேர்ந்த 5 பேரில், தாண்டவராயன் என்பவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை மறித்த கிராம மக்கள், சரமாரியாக அடித்து உதைத்தனர். வனத்துறைக் காவலர் தாண்டவராயன் வந்த இருசக்கர வாகனத்தையும் பொதுமக்கள் தீவைத்துக் கொளுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.