பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தமது சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் மக்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தாம் துவக்குவதாகவும் தெரிவித்துள்ளார். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தன்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல என்றும் தமது புரிதல் மற்றும் தமது கல்விக்காக மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 21ல் தமது கட்சி பெயரை அறிவிப்பதாக கூறிய நடிகர் கமல்ஹாசன், அம்றே ராமநாதபுரத்தில் தமது சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.
முன்னதாக ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில் தற்போது கமல் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.