100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்; சென்னை ஹார்வார்டு பல்கலைகழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் …

100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள் என்றும் எந்த நாட்டிலும், எந்த நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை ஹார்வார்டு பல்கலைகழகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில கலந்துக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் பிற மொழி கற்கும் மோகத்தில் சிலர் தமிழை கற்க மறுப்பது வேதனை அளிக்கிறது என்றும் வாழும் முறை முதல் ஆளும் முறை வரை திருக்குறளில் கூறப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *