இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2 ஆயிரத்து 17ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்காக ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தற்போது வெளியிடப்பட்ட விடுமுறை அறிவிப்பு போல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு நாளை ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.