பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இயற்கை அரண் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நீர் ஆதாரம் பெருகி விவசாயம் செழிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பாலாற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக தடுப்பணைகள் கட்டிட போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்று ம், இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *