சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் 30 ஆயிரத்து 495 போலி வாக்காளர்கள் நீக்கம் ; இடைத்தேர்தல் நடத்த நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 30 ஆயிரத்து 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 30 ஆயிரத்து 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம் பெற்றிருந்த 10 லட்சத்து 55 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொறுத்த வரை நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *