குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் நான்கு நாட்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாளை முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். நாளை அருணச்சல பிரதேச மாநிலம் இடாநகர் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை கட்டிடத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து அசாம், மணிப்பூர் மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.