பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும், கட்டுமானமும் பொய்களால் நிரம்பியது; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றசாட்டு…..

பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் நிரம்பியது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ராகுல் காந்தி,பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் நிரம்பியது என்று குற்றம் சாட்டினார். மேலும் குஜராத்தின் வளர்ச்சி பற்றிய மோடியின் பிரசாரமும் பொய் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என பாஜவால் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *