பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில் 3-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் பாகிஸ்தானில் நடைபெற்றது. 308 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 501 பேர் ஏலத்தில் இடம் பிடித்திருந்தனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கிறிஸ் கெய்ல் விளையாட வாய்ப்புள்ளதால், அவரால் முழுத்தொடர் முழுவதும் விளையாட முடியாது. இதனால் கெய்லை உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *