இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக இளம் வீரர் குல்தீப் யாதவ் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஆங்கில செய்திதாள் ஒன்றில் பேட்டி அளித்துள்ள அவர், இந்திய அணியில் சேர்வதற்கு முன்பு வரை மிகவும் கடினப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். கிரிக்கெட்டை விட்டு சென்று விடலாம் என்று எண்ணியதாக தெரிவித்துள்ள அவர், தனது 13 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் சேர முடியாத ஏக்கத்தில் தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். மகேந்திரசிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோரின் ஆலோசனைகள் தனக்கு பயனளிப்பதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *