பாகிஸ்தான் சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் 291 பேர் விரைவில் விடுதலை; நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்…..

பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 291 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து, அங்குள்ள சிறைகளில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சிறைகளில் உள்ள 291 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மொகமது பைசல் தெரிவித்துள்ளார். டிசம்பர் 29ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம்தேதி என இரு கட்டங்களாக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் 68 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *