2017ம் ஆண்டின் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகிக்கு, கதாக்கின் இதிகாசம் எனும் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்கு சாகிதிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப்புக்கு காந்தள் நாட்கள் என்கிற கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக இன்குலாப்பின் குடும்பத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கவிஞர் இன்குலாப் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதை ஏற்றுக்கொள்வது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-12-22