பறக்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி ரோந்து பணியை மேற்கொள்ள துபாய் காவல் துறை முடிவு செய்துள்ளது.

ஸ்கார்பியான் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார் சைக்கிள் ரஷ்யாவின் ஹோவர்சர்ஃப் எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில், நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது. 272 கிலோ எடையை சுமந்துகொண்டு, 64 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் வரை பயணம் செய்யும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் மட்டுமே பயணம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளை, ஆபத்து காலங்களிலும் அவசர காலங்களிலும் பயன்படுத்த துபாய் காவல் துறை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *