புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய ஆய்வு குழு ஆய்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் நாராயணசாமியை ஆய்வு குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்ததாக செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *