தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை கிழக்கு திசையில் இருந்து காற்று வீசினால்தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், வடகிழக்கு பருவ தொடங்கும் போதுதான் சென்னையில் அதிக மழை பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017-10-16