பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டம்….

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அன்றைய தினத்தை கருப்புப் பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டை மேம்படுத்தும் நேர்மையான நடவடிக்கை என்றும், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி, காமன்வெல்த் மற்றும் நிலக்கரி சுரங்க முறைகேடுகளைப் போன்ற கொள்ளையடிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்றும் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *