டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 36 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கட்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் காட்சிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில், 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும், அவர்கள் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சோதனையில், 36 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியிருப்பதாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் கூறியிருக்கின்றனர். எல்லையில் நடைபெறும் சட்டவிரோத வணிகம், நன்கொடை, ஏடிஎம் கொள்ளை, வெளிநாடுகளில் உள்ள வணிகர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு முகங்களிலிருந்து நிதி திரட்டப்பட்டு, ஏஜெண்டுகள் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பப்படுவதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2017-11-08