நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் அழுகி போனதால் அதனை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி, இலத்தூர் , மேக்கரை, சீவனல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சின்ன வெங்காயப் பயிர் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் மட்டுமே தங்கள் பயிரை உரிய காலத்தில் அறுவடை செய்து உள்ளனர்.
ஆனால் பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலத்தில் தொடர்மழை காரணமாக சின்னவெங்காயம் அழுகிய நிலையில் உள்ளது அவர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயிர்கள் விளைந்து சுமார் 5 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் அனைத்தும் அழுகி விட்டதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.