நீட் தேர்வு எதிர்ப்புப் போராளிஅனிதாவின் முதலாமாண்டு நினைவு நாள்..

மருத்துவராகும் கனவு கலைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் இது யாருக்கும் நடந்து விடக்கூடாது என்று தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த  12ம் வகுப்பு பொதுத் தோ்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கு நீட்தோ்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

மேலும் நீட் தோ்விற்கும் தம்மை தயாா் படுத்தி வந்தாா். நீட் தோ்வில் அனிதா தோ்ச்சி பெறாத நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தோ்வு கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனால் மருத்துவராகும் கனவு கலைந்த விரக்தியில் மாணவி அனிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. அவா் வாழ்ந்த இடத்தில் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு நீட் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *