செப்டம்பர் வரை முடிந்த காலாண்டில் இரண்டாயிரத்து 696 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 582 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலாண்டை விட 38 சதவீதம் சரிவை கண்டுள்ளது. மேலும் வராக்கடன் அளவு 9 புள்ளி ஒன்பது ஏழு சதவீதத்தில் இருந்து 9 புள்ளி எட்டு மூன்று சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் எஸ்பிஐ வங்கியின் வருமானம் 27 புள்ளி மூன்று சதவீதம் வரை உயர்ந்து 18 ஆயிரத்து 586 கோடியாக அதிகரித்துள்ளது.
2017-11-11