இந்தியா – சீனா இருநாடுகளிடையே உண்மையான எல்லை கோடு இதுவரை வரையறை செய்யப்படாமல் உள்ளது. இது தொடர்பாக 19 முறை இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங், இந்தியா சீன இடையே இருநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் 20-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இந்திய – சீனா – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால், சீனா அரசு பிரதிநிதி யங்ஜெயிச்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் ஹூவா சுன்யிங் கூறினார்.
6. மழை பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மூன்று மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.