ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய அரசில் 4 ஆண்டுகள் அங்கம் வகித்த தெலுங்குதேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தததால்தான் அதை ஆதரிக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனைக்காக கடந்த முறை அதிமுகவே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயன்றதாகவும், ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றும் தம்பிதுரை கூறினார்.