ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட, ஜெனீவாவில் இயங்கி வரும் ”ஐகேன்என்ற அமைப்பு தேர்வானது. இந்த அமைப்பு 2007-ம் ஆண்டு முதல், ஆணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் நேற்று நடைபெற்ற விழாவில், ஐகேன் அமைப்பின் நிர்வாகி பேட்ரிஸ் பின்-னிடம் முறைப்படி விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய பேட்ரிஸ் பின், அணு ஆயுதங்களை கைவிடுவது உலக அளவில் சிறந்த முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
2017-12-11