நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐகேன் அமைப்புக்கு, விருது வழங்கப் பட்டது.

ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட, ஜெனீவாவில் இயங்கி வரும் ”ஐகேன்என்ற அமைப்பு தேர்வானது. இந்த அமைப்பு 2007-ம் ஆண்டு முதல், ஆணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் நேற்று நடைபெற்ற விழாவில், ஐகேன் அமைப்பின் நிர்வாகி பேட்ரிஸ் பின்-னிடம் முறைப்படி விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய பேட்ரிஸ் பின், அணு ஆயுதங்களை கைவிடுவது உலக அளவில் சிறந்த முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *