வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை மாதம் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் ஒருமாத சிகிச்சைக்குப் பின், கடந்த 20-ஆம் தேதி சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக கலைஞர் நினைவிடத்திற்கு வந்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் ஒன்றில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.