தாம் தேநீர் விற்றேனே தவிர, தேசத்தை விற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதி ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு சூரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குஜராத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் மண்ணில் வளர்ந்த தாம், தேசம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார். மேலும் தாம் தேநீர் விற்றேனே தவிர, தேசத்தை விற்கவில்லை என்றும் பிரதமர் மோடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.