சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நோயளிகளின் நலன் கருதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *