தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து நாடு முழுவதும் பனிக்காலம் நிலவுகிறது. வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லை பகுதிகளில் குளிர் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு தென் மாநிலங்களுக்கு மழை இல்லை என்றும், தென் இந்திய பகுதியில் அந்தமான் தீவுகளில் மட்டும் இயல்பை விட மழை குறைந்து காணப்படும்’ என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *