தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் முதலமைச்சர் முடிவுகளை அறிவிப்பதாக கூறினார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் செல்ல தயார் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற இடமில்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.