இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடர் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சு தென் ஆப்ரிக்கா அணிக்கு சவாலானதாக இருக்கும் என்றும் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
2018-01-04