சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், குமரிக்கடல் முதல், தென்மேற்கு வங்கக்கடல் வரை பரவியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டதாகக் கூறினார். ஆனால், இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று காலை கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2017-11-07