இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றுள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவனந்தபுரத்திலும் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *