இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது. முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய ரவி சாஸ்திரி, தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ் மேன்கள் தடுமாறுவார்கள் என்றால், தங்களாலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.