தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டி தென் கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 1,300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருப்பதால் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *