தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும், திரையரங்குகளில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். இந்த விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது தமிழக அரசிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கட்டளையிட விஷால் யார்? என கேள்வி எழுப்பினார்.
2017-10-15