தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் வேகமாகவும், முழுமையாகவும் செயல்படுத்தியிருந்தால், டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழித்திருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தமிழக அரசு இன்னும் சிறிது நாட்களுக்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக அரசு பயன்படுத்தாததே டெங்குவுக்கு காரணம் என்றும் மதுபாட்டில்களை வாங்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *