திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிச்சகல்பட்டி கிராமத்தில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ் என்ற வெடி மருந்து நிறுவனத்தின் பெயரில் நிலங்களை வாங்கி புதிய வெடிமருந்து தொழிற்சலையை அமைப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டு பேரணியாக சென்று வெடி மருந்து தொழிற்சாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி உறையூரில் நடைபெற்ற விபத்தில் 19 பேர் பலியான நிலையில் இங்கு வெடிமருந்து தொழிற்சாலை அமைப்பது தங்கள் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.