வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடி வழியாக ரயிலில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு ரேஷன் அசிரி மூட்டைகள் கடத்தப்படுவதாக காட்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் காட்பாடி வட்ட வழங்கல் துறையினர் சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி செல்லும் ரயிலில் முழுமையாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு பெட்டிகளில் பயணிகள் இருக்கையின் கீழ் மூட்டைகளாக கட்டி ரேஷன் அரிசி போடப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.