பொதுமக்கள் அளிக்கும் புகார்களைஆன்லைனில் பதிவு செய்வதற்கானவசதியை அனைத்து காவல்நிலையங்களிலும் 6 மாதத்திற்குள்ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றமதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புகார் மனுக்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், புகாரின் பேரில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் நிலை குறித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால், மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும் .
இதை போலீசார் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக்குழு ஒவ்வொரு 2 மாதத்திற்கும் இடையே ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விளக்கமளிக்க வாய்ப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.
மேலும் புகார் அளித்த 15 நாட்களுக்குள் கட்டாயம் விசாரணையை முடிக்க வேண்டும். சில குறிப்பிட்ட புகார்களுக்கு மட்டும் 6 வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.